ரஞ்சனுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் அவருக்கு எதிராக தொடரப்பட்டுள்ள இரண்டாவது வழக்கின் விசாரணைக்காக அவர் இன்று (திங்கட்கிழமை) நீதிமன்றில் முன்னிலையாகி இருந்தார்.

இந்நிலையில் எதிர்வரும் மார்ச் மாதம் 9ஆம் திகதிவரை நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் இரண்டாவது விசாரணை ஒத்திவைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு நான்கு ஆண்டு கால கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *