ஃபிராங்க்ளின் புயல்: பிரித்தானியாவில் புயல்- வெள்ளம் காரணமாக மக்கள் வெளியேற்றம்!

ஃபிராங்க்ளின் புயல் நெருங்கி வருவதால், கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் புயல் காரணமாக சில பகுதிகளில் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

வடக்கு அயர்லாந்தின் சில பகுதிகளில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டது. அதே நேரத்தில் யார்க்ஷயர் மற்றும் மன்செஸ்டரில் உள்ள மக்கள் பாதுகாப்புக்காக தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

புதிய புயலின் தாக்கம் ஒரே இரவில் தாக்கும் என்று கணிக்கப்பட்டது. யூனிஸ் புயல் மூன்று பேரைக் கொன்று 1.4 மில்லியன் வீடுகளுக்கு மின்சாரம் இல்லாமல் போன சில நாட்களுக்குப் பிறகு ஃபிராங்க்ளின் புயல் தாக்கவுள்ளது.

வானிலை மையம், ஞாயிறு மாலை மற்றும் திங்கள் ஆகிய இரண்டு வானிலை எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளது.

வடக்கு அயர்லாந்தின் வடக்கில் திங்கட்கிழமை 00:00 மணி முதல் 07:00 மணி வரை காற்று வீசும் என செம்மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வேல்ஸ், வடக்கு அயர்லாந்து, இங்கிலாந்தின் பெரும்பாலான பகுதிகள் மற்றும் தென்மேற்கு ஸ்கொட்லாந்தின் சில பகுதிகளை ஞாயிறு மதியம் 12:00 முதல் திங்கட்கிழமை 13:00 வரை மூடும் காற்றுக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

150க்கும் மேற்பட்ட வெள்ள எச்சரிக்கைகள் இங்கிலாந்தின் வடக்கு முழுவதும் உள்ளன. யார்க்ஷயர் மற்றும் மன்செஸ்டர் ஆகியவை வெள்ளத்தால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.

நோர்த் யார்க்ஷயர் தீயணைப்புச் சேவையானது மக்களைக் காப்பாற்றும் பணியில் ஈடுபட்டுள்ளது.

தெற்கு மன்செஸ்டரில் உள்ள 400க்கும் மேற்பட்ட வீடுகளில் உள்ளவர்களின் உயிருக்கு ஆபத்து என இரண்டு கடுமையான வெள்ள எச்சரிக்கைகள் சுட்டிக்காட்டப்பட்டதை அடுத்து, அவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்று சுற்றுச்சூழல் நிறுவனம் கூறியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *