<!–
பாகிஸ்தான் கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் 31 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் கடற்படை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இது குறித்து பாகிஸ்தான் கடல்சார் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளதாவது, பாகிஸ்தான் சிறப்புப் பொருளாதார மண்டல கடற்பகுதிக்குள் கடந்த 18 ஆம் திகதி ரோந்து சென்ற போது ஊடுருவிய 5 இந்திய மீன்பிடிப் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அவற்றில் இருந்த 31 மீனவர்களும் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து சட்ட நடவடிக்கைகளுக்காக அந்தப் படகுகள் கராச்சிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.