யாழில் பச்சை மிளகாய் திருடிய இருவருக்கு விளக்கமறியல்! நீதிமன்று உத்தரவு

யாழில் பச்சை மிளகாய் திருடிய இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

யாழ். சுன்னாகம் பகுதியில் பச்சை மிளகாய் திருடிய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டனர்.

மயிலங்காடு – புன்னாலைக்கட்டுவன் பகுதியில் உள்ள தோட்டம் ஒன்றிலேயே இவர்கள் பச்சை மிளகாயை திருடியுள்ளனர்.

அதன்படி, 10 மற்றும் 15 கிலோ பச்சை மிளகாய்கள் திருடப்பட்டுள்ளன என்று தோட்ட உரிமையாளர் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கு அமைய, சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

இதையடுத்து, மல்லாகம் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட சந்தேக நபர்களை எதிர்வரும் 3ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்று உத்தரவிட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *