கொரோனா வைரஸினால் மேலும் 31 உயிரிழப்புகள் பதிவு!

கொரோனா வைரஸினால் மேலும் 31 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

ஆண்கள் 17 பேரும் பெண்கள் 14 பேருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இலங்கையில் மாத்திரம் ஆயிரத்து 452 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இலங்கையில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்து 83 ஆயிரத்து 512ஆக அதிகரித்துள்ளது.

அவர்களில் 2 இலட்சத்து 55 ஆயிரத்து 833 பேர் தொற்றில் இருந்து மீண்டுள்ள நிலையில், தொற்றுக்கு உள்ளான 23 ஆயிரத்து 946 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

Leave a Reply