கண்டி மாவட்டத்தில் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இன்று முதல் தடுப்பூசி

<!–

கண்டி மாவட்டத்தில் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இன்று முதல் தடுப்பூசி – Athavan News

கண்டி மாவட்டத்தில் உள்ள 30 வயதுக்கு மேற்பட்ட சகலருக்கும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.

அவர்களுக்கு ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்காக 6 இலட்சத்து 25 ஆயிரம் ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் கண்டி மாவட்டத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

எனவே பொதுமக்கள் எவ்வித பயமுமின்றி தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


Leave a Reply