
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மகிந்த ராஜபக்ஷ ஆகியோர் பதவி விலக மாட்டார்கள் என அரசாங்கம் மீண்டும் அழுத்தமாகத் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற அமர்வு இன்றைய தினம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சமயத்தில் உரையாற்றிய அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ இந்த விடயத்தினைக மீண்டும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், அரசாங்கம் அனைத்து பிரச்சினைகளுக்கும் முகங்கொடுக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.