<!–
ராஜஸ்தான் மாநிலம் பிகானிரியில் இன்று (புதன்கிழமை) அதிகாலை சக்கிவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது.
குறித்த நிலநடுக்கம் 5.3 என்ற ரிக்டர் அளவில் பதிவாகியதாக தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது. இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
அதேநேரம் வடக்கிழக்கு மாநிலங்களில் ஒன்றான மேகாலயாவிலும் நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. 4.1 என்ற ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 3.6 என்ற ரிக்டர் அளவில் லடாக் யூனியன் பிரதேசத்திலும் நிலநடுக்கம் ஒன்று பதிவாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.