தெமட்டகொடை ரயில்வே நிலைய வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்து, இரும்பு மற்றும் செப்பு கம்பிகளை திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் தெமட்டகொடை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்ட நபர் 62 வயதுடையவர் ஆவார்.
சந்தேக நபர் 3 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான கம்பிகளை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல பழுதடைந்த ரயில் வண்டிகளிலிருந்து திருடியதாக கூறப்படுகிறது.
இந் நிலையில் ரயில்வே நிலைய முகாமையாளர் தெமட்டகொடை பொலிஸ் நிலையத்தில் அளித்த முறைப்பாட்டுக்கு அமைவாகவே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.