
மாதம்பே, ஏப் 15
மாதம்பை – வெல்லராவ பிரதேசத்தில் கூரிய ஆயுதம், பொல்லினால் தாக்கி நபரொருவர் கொல்லப்பட்டுள்ளார்..
மற்றுமொருவர் சில தரப்பினரால் தாக்கப்படுவதை தடுக்க முற்பட்டபோதே குறித்த நபர் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
எவ்வாறாயினும், தாக்குதலுக்கு இலக்கானவர் சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் மஹகம தெற்கு முகுனுவடவன பிரதேசத்தை சேர்ந்த 39 வயதான ஒருவரென தெரியவந்துள்ளது.
சந்தேக நபரை கைது செய்ய மாதம்பை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.