யாழில் அரசி, பருப்பு, சீனிக்காக, பறிபோன பாட்டியின் நகைகள்

யாழ்ப்பாணம் – மானிப்பாய் மருதடி ,விநாயகர் ஆலயத்தில் இன்று தீர்த்த உற்சவம் நடைபெறுகிறது.

குறித்த தினத்தில் நூதன திருட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

ஆலய தரிசனத்துக்கு வருகை தந்த 72 வயது பாட்டி ஒருவரை அருகில் உள்ள சைக்கிள் பார்க்கில் நபர்கள் சிலர் சந்தித்துள்ளனர்.

கிராம உத்தியோகத்தர் அலுவலகத்தில் அரசி சீனி பருப்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்குகிறார்கள்.

நீங்கள் நகையுடன் வந்தார்கள் பொருட்களை தர மாட்டார்கள். ஆகவே நகைகளை கலற்றி விட்டு வாருங்கள் ஆட்டோவில் செல்வோம் என கூறியுள்ளனர்.

இதனை கேட்ட பாட்டி நகைகளை கழற்றி கொடுத்துள்ளார்.ஆட்டோ எடுத்துக்கொண்டு வருகின்றோம் என கூறி விட்டு திருடர்கள் நகைகளை வாங்கிக்கொண்டு தப்பித்து சென்றுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *