மூதூர் பிரதான வீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையில் பெற்றோல் தீர்ந்துள்ளது.
இதனால் இன்று வெள்ளிக்கிழமை குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் “பெற்றோல் இல்லை ” எனும் வாசகமொன்று போடப்பட்டுள்ளது.
இதனால் சம்பூர், மூதூர் நகர், தோப்பூர், பட்டித்திடல், கிளிவெட்டி போன்ற தூரப் பகுதிகளிலிருந்து மூதூர் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு பெற்றோல் நிரப்புவதற்காக வந்த மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்கள் எரிபொருளை நிரப்ப முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றன.
