புதுவருடதினத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி

வவுனியா புளியங்குளம் முல்லைத்தீவு பிரதான வீதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார்.

நேற்று (14) இரவு புத்தாண்டு தினத்தன்று இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த இளைஞர் மோட்டார் சைக்கிளில் பயணித்து கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வீதியின் அருகில் இருந்த தூணுடன் மோதுண்டு விபத்திற்குள்ளாகியது.

விபத்தில் தூக்கி வீசப்பட்ட இளைஞர் படுகாயமடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார்.

குறித்த விபத்து சம்பவத்தில் முல்லைத்தீவு குமுழமுனையை சேர்ந்த 44 வயதுடைய சு.கோபிநாத் என்பவரே இவ்வாறு மரணமடைந்தவராவார்

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *