
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பின் (வடக்கு கிழக்கு) ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவேந்தல் முற்றத்தில் எதிர்வரும் 18இல் முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவேந்தலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
சிறீலங்கா அரசாலும் அதன் நேச நாசகார சக்திகளாலும் துடிக்கத் துடிக்க திட்டமிட்டு 2009 இல் கொன்றொழிக்கப்பட்ட நாளை, மருந்தையும் உணவையும் தடைசெய்து தமிழரைத் தலைவணங்க வைக்க முயன்று..! தோற்று யுத்த சூனிய வலயங்கள் என்று உத்தியோக பூர்வமாக வலையங்களை அறிவித்து நரித்தனமாக மக்களை அவ்வலயங்களுள் ஒன்றுகூட்டி உலகினால் மனித குலத்திற்கு ஒவ்வாததென தவிர்த்தொதுக்கப்பட்ட போர் முறைகளையும் கொடிய இரசாயன ஆயுதங்களையும் பயன்படுத்தி உலகு மௌனமாய்ப் பார்த்திருக்க எம்மினத்தை கருவறுத்த நாளை, பேதங்கள் அனைத்தையும் தவிர்த்து…! தமிழர் என்கின்ற நிமிர்வுடன் ஒன்றிணைந்து முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவேந்தல் முற்றத்தில் 18 .05. 2022 இல் நினைவேந்த அனைவரையும் பணிவன்புடன் வேண்டி நிற்கின்றது.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு வடக்கு கிழக்கு. இவ்வருடத்திற்கான முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை மிகப்பெரும் மக்கள் எழிச்சியுடன் நினைவேந்துவது தொடர்பக திட்டமிடல்க்கூட்டங்கள் எதிர் வரும் நாட்களில் அனைத்து தரப்பினரின் பங்களிப்புடன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பினால் மேற்கொள்ளப்படும் .
இந்நினைவேந்தல் முற்றுமுளுதாக மக்கள் பங்களிப்புடன் நடைபெறும். இதற்கான நிதி சேகரிப்புக்கள் புலம்பெயர் தேசங்களிலோ புலத்திலோ நடைபெறது. இது தொடர்பில் விளிப்புணர்வை பேணும் வண்ணம் அனைவரிடமும் அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.