மின்னல் தாக்கி 8 பேர் பலி

அசாம், ஏப் 16

வடகிழக்கு மாநிலங்களான சிக்கிம், அருணாசல பிரதேசம், அசாம், மேகாலயா, நாகாலாந்து உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்த 5 நாட்களுக்கு மழை தொடரும் என இந்திய வானிலை மையம் தெரிவித்திருந்தது.

அசாம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் மின்னல் தாக்கியதில் 2 சிறார்கள் உள்பட 8 பேர் பரிதாபமாக பலியாகினர்.

திப்ருகர் மாவட்டத்தில் 4 பேரும், பர்பேட்டா மாவட்டத்தில் 3 பேரும், கோல்பாரா மாவட்டத்தில் ஒருவர் என மொத்தம் 8 பேர் பலியாகினர் என பேரிடர் மீட்புக்குழுவினர் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *