உலகெங்கிலும் இன்று உயிர்த்த ஞாயிறு அனுஷ்டிப்பு

இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலைக் குறிக்கும் ஈஸ்டர், இலங்கையிலும் உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்களால் இன்று ( ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகின்றது .

இதற்கமைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் வாழ்த்து செய்தி வெளியிடப்பட்டுள்ளது .

ஈஸ்டர் என்பது கிறிஸ்துவின் இருளைக் கடந்து நம்பிக்கையைக் கொண்டுவரும் மாற்றும் சக்தியின் அறிவிப்பு. நம்பிக்கை மற்றும் இரட்சிப்பின் மூலம் இவ்வுலகில் இருள் மற்றும் அவநம்பிக்கையை நீக்குவதற்கு கிறிஸ்துவின் சிலுவை மரணம் மற்றும் அவரது உயிர்த்தெழுதல் பற்றிய செய்தியைப் பற்றி சிந்திக்க அனைவரையும் அழைக்கிறது என்றும் தெரிவித்தார் .

எவ்வாறாயினும், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொடூரமான ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் சோகமான அனுபவம் நம் மனதில் தொடர்ந்து எதிரொலிக்கிறது.

எனவே, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதியை உறுதி செய்வதற்கும், பொறுப்பான அனைத்து தரப்பினருக்கும் எதிராக உரிய மற்றும் முறையான விசாரணைகள் மூலம் சட்டத்தை அமுல்படுத்துவதற்கும் எங்கள் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது என்பதை நான் உறுதியளிக்கிறேன் என்றும் அவர் மேலும் தெரிவித்தார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *