நாடளாவிய ரீதியில் 10 ஆயிரம் பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில்!

நாடளாவிய ரீதியில் 10 ஆயிரம் பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இன்று(வெள்ளிக்கிழமை) முதல் ஆரம்பமாகியுள்ள வார இறுதி நீண்ட விடுமுறையினை அடுத்தே இவர்கள் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன், மாகாண எல்லைகளிலும் பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இதன்போது பயணக்கட்டுப்பாடுகளை மீறிப்பயணிப்போருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply