பெல்ஃபாஸ்ட் மருத்துவமனையில் தடுப்பூசி போடாத 60 சதவீதத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா!

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக் காரணமாக சமீபத்திய வாரங்களில் பெல்ஃபாஸ்டில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 60 சதவீதத்துக்கும் அதிகமானோர் தடுப்பூசி போடப்படவில்லை என்று பெல்ஃபாஸ்ட் அறக்கட்டளையின் மருத்துவ இயக்குநர் கிறிஸ் ஹேகன் தெரிவித்துள்ளார்.

20-39 வயதுக்குட்பட்டவர்களில், இளம் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது என அவர் மேலும் தெரிவித்தார்.

பெல்ஃபாஸ்ட் அறக்கட்டளையில் மொத்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த வாரத்தை விட இரு மடங்காக அதிகரித்துள்ளது. இது 27 முதல் 60 வரை.

தற்போது, 18-30 வயதுடையவர்களில் 44 சதவீதம் பேர் தடுப்பூசி போடுவதற்கான வாய்ப்பை எடுக்கவில்லை எனவும் இதனால் சேவைகளில் குறிப்பிடத்தக்க அழுத்தம் இருப்பதாக அவர் கூறினார்.

Leave a Reply