
மும்பை,
ஐபிஎல் 15வது சீசன் சுவாரசியமான கட்டத்தை எட்டியுள்ளது. வெள்ளிக்கிழமை மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சென்னை – மும்பை அணிகள் மோதின .
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது.
சென்னை அணியின் தொடக்க வீரர்களாக டேவான் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்கினர் தொடக்கத்தில் டேவான் கான்வே ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த மொயீன் அலி ரன் எதுவும் எடுக்காமலும் ,ராபின் உத்தப்பா 1 ரன்களில்,ருதுராஜ் கெய்க்வாட் 7 ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர் .
சென்னை அணியில் கேப்டன் டோனி மட்டும் நிலைத்து நின்று ஆடினார் .மறுபுறம் களமிறங்கிய வீரர்கள் மும்பை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வந்த வேகத்தில் நடையை கட்டினர் .
ஒரு சில பந்துகளை மட்டும் பவுண்டரி ,சிக்சருக்கு அனுப்பி டோனி தொடர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் .
9 விக்கெட்டுக்களை இழந்ததால் 15 ஓவரின் கடைசி பந்தில் ஒரு ரன் எடுக்க முயற்சித்து டோனி ஓடினார் .ஆனால் அதில் ஏதிர்முனையில் இருந்த முகேஷ் சௌத்ரி ரன் அவுட்டானார் .
இறுதியில் சென்னை அணி 16 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 97 ரன்களுக்கு ஆட்டமிழந்தது .சென்னை அணியில் அதிகபட்சமாக டோனி 36 ரன்கள் எடுத்தார். மும்பை அணியில் டேனியல் சாம்ஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனை தொடர்ந்து 98 ரன்கள் இலக்குடன் மும்பை அணி விளையாடியது .தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித் சர்மா , இஷான் கிஷான் களமிறங்கனர்.
இஷான் கிஷான் 6 ரன்களிலும் ,ரோகித் சர்மா 18 ரன்களிலும் ஆட்டமிழந்தனர் .பின்னர் வந்த டேனியல் சாம்ஸ் 1 ரன்னிலும் ,ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர் .ஒரு கட்டத்தில் சென்னை அணி வெற்றி பெறுமா என எதிர்பார்க்கப்பட்டது .ஆனால் பின்னர் வந்த திலக் வர்மா நிலைத்து நின்று ஆடி 34 ரன்கள் எடுத்தார்.
மும்பை அணி 14.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 103 ரன்கள் எடுத்தது . இதனால் 5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது.