எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தேர்தலுக்குச் செல்வதற்கான சூழல் அமையும் வரை, குறுகிய காலத்துக்குப் பிரதமர் பதவியை ஏற்குமாறு பலமுறை கோரிக்கை விடுத்தும், ஆளுமை இல்லாததால், அவர் அந்தப் பதவியை ஏற்கவில்லை.

ஓமல்பே சோபித தேரர் இவ்வாறு தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் தனது பொறுப்புகளை நிறைவேற்றியிருந்தால் பிரதமர் பதவிக்கு நெருக்கடி ஏற்பட்டிருக்காது என கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.

பிரதமர் பதவியை ஏற்குமாறு தமக்கு தொடர்ந்து அறிவிக்கப்பட்டும் அவர் அதில் எந்த கவனமும் அக்கறையும் செலுத்தவில்லை எனவும் அதற்கான பலம் தமக்கு இல்லை என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *