க.பொ.த சாராரண தர பரீட்சாத்திகளுக்கான முக்கிய அறிவிப்பு

சாதாரண தரப் பரீட்சைக்கான அனுமதிபத்திரங்களை விநியோகிக்கும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பிக்கப்படும் என தபால் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன இதனை குறிப்பிட்டுள்ளார்

எதிர்வரும் 16 ஆம் திகதிக்குள் விநியோக நடவடிக்கைகளை நிறைவு செய்வதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்

அத்துடன் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் ஜூன் மாதம் முதலாம் திகதி வரை கல்விப்பொதுத்தராதர சாதரணதர பரீட்சைகள் இடம்பெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ள நிலையில், 2021 ஆம் ஆண்டுக்கான கல்விப்பொதுத்தராதர சாதரணதர பரீட்சைக்கு தோற்றும் பாடசாலை பரீட்சார்த்திகளுக்கான பரீட்சை அனுமதிப்பத்திரம் மற்றும் காலஅட்டவணை ஆகியன பாடசாலை அதிபரூடாக அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் தனியார் பரீட்சார்த்திகளுக்கான அனுமதிப்பத்திரம் மற்றும் காலஅட்டவணை ஆகியன பரீட்சார்த்திகளின் சொந்தமுகவரிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *