ஊரடங்கு தளர்வு – மீண்டும் இன்று பி.பகல் 2.00 மணிக்கு அமுல்

இன்று (13) காலை தளர்த்தப்படும் ஊரடங்கு இன்று பி.பகல் 2.00 மணி முதல் மீண்டும் அமுல்படுத்தப்பட உள்ளது.

நாடு தழுவியதாக கடந்த 9ம் திகதி இரவு முதல் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு நேற்று (12) காலை 7.00 மணி முதல் தளர்த்தப்பட்டு பி.பகல் 2.00 மணி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது.

ஊரடங்கு இன்று வெள்ளிக்கிழமை காலை 6.00 மணிக்குத் தளர்த்தப்படுகின்ற போதிலும் மீண்டும் பிற்பகல் 2.00 மணிக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்றும் நாளை (14) காலை 6.00 மணிவரையில் அது நடைமுறையில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *