பிரதமராக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜனாதிபதி செயலகம் முன்பாக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
ஆறாவது தடவையாக இலங்கையின் பிரதமராக ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டதற்கு பதிலளிக்கும் வகையில், காலி முகத்திடல் ஆக்கிரமிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள், ‘ரணில்-ராஜபக்ச வீட்டுக்கு செல்லுங்கள்’ என கோஷமிட்டுள்ளனர்.
இது ராஜபக்சவை மூடிமறைக்கும் முயற்சியா என்ற சந்தேகம் தங்களுக்கு இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
காலிமுகத்திடலில் நேற்று இரவு இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.