வியாழேந்திரனிடம் அடைக்கலம் தேடிச்சென்றாரா மகிந்த?

மட்டக்களப்பில் உள்ள வியாழேந்திரன் வீட்டிற்கு, மகிந்த ராஜபக்ச அடைக்கலம் தேடி சென்றுள்ளதாக தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், இது தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தெரிவிக்கையில்,

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவை நான் மறைத்து வைத்திருப்பதாக தென்னிலங்கை அரசியல் வாதிகள் அப்பட்டமான பொய்களை கூறிவருகின்றனர்.

அவர்கள் 24 மணி நேரமும் எனது வீட்டிற்கு வந்து சோதனை செய்யலாம்.

மேலும் முன்னாள் பிரதமர் உட்பட அரசாங்கத்தினர் யாராக இருந்தாலும் ஊழல் செய்தமை நிரூபிக்கப்பட்டால் அவர்களுடனான உறவை உடனே முறித்துக்கொள்வோம் என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *