ரயில் சேவைகளை முன்னெடுக்க தீர்மானம்

மக்களின் தேவைக்கேற்ப ரயில் சேவையினை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் இன்று காலை 7.00 மணிக்கு தளர்த்தப்பட்டதன் பின்னர் மட்டுப்படுத்தப்பட்டளவில் ரயில் சேவைகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்றைய தினம் வழமையான ரயில்சேவைகள் முன்னெடுக்கப்படமாட்டாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை தொலைதூர ரயில் சேவைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படுமென ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், ரயில் சேவைகள் தொடர்பான தகவல்களை காலை 7 மணிக்குப் பின்னர் 1971 எனும் துரித தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை மேற்கொள்வதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் நேற்றைய நாளில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட காலப்பகுதியில் போதியளவு பொதுப்போக்குவரத்து சேவை இன்மை காரணமாக மக்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *