கோட்டா ஆட்சியில் அடுத்தகட்ட நகர்வு! நாளை முக்கிய முடிவு 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும், அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் நாளை சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

இந்த சந்திப்பு நாளை முற்பகல் 10 மணிக்கு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாட்டின் தற்போதைய நிலைமை மற்றும் நாடாளுமன்றத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 9 ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட அமைதியின்மையை அடுத்து, ஜனாதிபதிக்கும், அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையே இடம்பெறவுள்ள முதலாவது சந்திப்பு இதுவென்பது குநிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *