எடின்பரோ மரதன் நிகழ்வில் வைத்தியர் சத்தியமூர்த்தி பங்குபற்றி 10 ஆயிரம் பவுண்ட்களுக்கு மேலான நிதியை கிளி மக்கள் அமைப்பிற்கு சேகரித்துக் கொடுத்துள்ளார்.
கிளி மக்கள் அமைப்பினால் வடக்கு கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கும் கல்வி வளர்ச்சித் திட்டங்களுக்காக இந்த நிதி பயன்படுத்தப்படவுள்ளது.
கிளி மக்கள் அமைப்பு வடக்கு கிழக்கு மாகாணங்களின் கல்வி வளர்ச்சிக்காக நிதி சேகரிக்கும் நிகழ்வு எதிர்வரும் ஜூலை மாதம் நடைபெறவுள்ள நிலையிலேயே, எடின்பரோ மரதன் ஸ்கொட்லன்ட் நாட்டில் இடம்பெற்றது.
இதில் வைத்தியர் சத்தியமூர்த்தி கலந்துகொண்டு 42 கிலோமீற்றர் மரதன் ஓடி நிறைவு செய்துள்ளார்.

இதற்கு ஆதரவு வழங்கும் நோக்கில் கிளிநொச்சியில் அடையாள மரதன் ஓட்ட நிகழ்வு இடம்பெற்றது.
கிளிநொச்சியின் பரந்தன் சந்தியில் இருந்து கிளிநொச்சி வரை இடம்பெற்ற நிகழ்வில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
ஐக்கிய இராச்சிய ஸ்கொட்லாண்ட் நாட்டு நேரம் பத்து மணிக்கு இடம்பெற்ற மரதன் நிகழ்வில் சுமார் பத்தாயிரம் பேர் கலந்து கொண்டமை சிறப்பம்சமாகும்.
இதேவேளை 2 லட்சம் பார்வையாளர்கள் மரதன் ஓட்டத்தில் பங்கு பற்றியவர்களுக்கு ஆதரவு ஊக்குவிப்பு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்