கோட்டுகோட-மஸ்கேட் சந்தியில் இன்று பயணித்த மகிழுந்து (கார்) ஒன்று நடுவீதியில் தீப்பற்றி எரிந்துள்ளது.
இதனை அவதானித்த பொதுமக்கள், உடனடியாக தீயணைப்பு பிரிவினருக்கு தகவல் வழங்கி உள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு பிரிவினர்,மகிழுந்தில் பிடித்த தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இச்சம்பவம், தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதேவேளை நடுவீதியில் திடீரென பற்றி எரியும் வாகனங்களின் எண்ணிக்கை இலங்கையில் சடுதியாக அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.