மரண பரிசோதனை தொடர்பில் சிறுமியின் தாய் சந்தேகம்

தனது மகளின் மரண பரிசோதனையில் தனக்கு சந்தேகம் டயகம சிறுமியின் தாய் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிய நிலையில் தீயில் எரிந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்த டயகம சிறுமி ஹிஷாலினியின் மரணம் குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழுவில் அவரது பெற்றோர்முறைப்பாடொன்றை இன்று (26) பதிவு செய்துள்ளனர்.

இதனையடுத்து, சிறுமியின் தாய் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார்.

“என்னுடைய மகளுக்கு நிறைய அநியாயங்கள் நடந்துள்ளன. என் மகளை இருட்டு அறையில் அடைத்து வைத்திருந்துள்ளனர் மின்விசிறி இல்லாமல், உணவு இல்லாமல் சித்திரவதை செய்துள்ளனர்.

என்னுடைய மகள் இவற்றையெல்லாம் மறைத்து எனக்கு வேலை செய்ய முடியாது இங்கிருந்து அழைத்துச் செல்லுங்கள் என கூறினார். இப்பொழுது தேடிப்பார்க்கும் போது எனது பிள்ளைக்கு சரியான அநியாயம் செய்துள்ளது தெரியவந்துள்ளது.

எனது மகளின் மரண பரிசோதனையில் எனக்கு சந்தேகம் உள்ளது. எனவே மீள மரண பரிசோதனை நடத்தப்பட வேண்டும்” என்றார்.

Leave a Reply