காண்டாவளை பிரதேச செயலக செயற்பாடுகள் இடைநிறுத்தம்

கிளிநொச்சி – கண்டாவளை பிரதேச செயலக ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில் செயலகத்தின் செயற்பாடுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

கண்டாவளை பிரதேச செயலகத்தில் பணியாற்றும் யாழ். கொடிகாமம் பகுதியை சேர்ந்த ஊழியர் ஒருவர் எழுமாற்றான பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில் அவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டு நேற்று (25) இரவு அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து, இன்று (26) பிரதேச செயலகச் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டு அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு பி.சி.ஆர் மாதிரிகள் பெறப்படுகின்றன.

இந்நிலையில் ஊழியர்களின் பி.சி.ஆர் முடிவுகள் வெளிவந்த பின்னர் பிரதேச செயலகச் செயற்பாடுகளை ஆரம்பிப்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிறப்பு மற்றும் இறப்பு அத்தாட்சிப் பத்திரங்கள் உட்பட்ட மிக அவசியமான தேவைகளை அரச செயலகத்தின் ஊடாக பெற்றுக்கொள்ளுமாறு பிரதேச செயலர் த.பிருந்தாகரன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply