வெனிசுவேலாவில் கொவிட் தொற்றினால் மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

வெனிசுவேலாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால் மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, வெனிசுவேலாவில் மொத்தமாக மூன்று இலட்சத்து 919பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 67ஆவது நாடாக விளங்கும் வெனிசுவேலாவில் இதுவரை மூவாயிரத்து 509பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், ஆயிரத்து 97பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 17பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 12ஆயிரத்து 975பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 424பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளனர்.

இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து மொத்தமாக இரண்டு இலட்சத்து 84ஆயிரத்து 435பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Leave a Reply