வவுனியாவில் விலைமாது ஒருவருக்கு கொரோனா தொற்று

வவுனியா பழைய பேருந்து நிலையப்பகுதியில் பாலியல் தொழிலில் ஈடுபட்டுவந்த விலைமாது ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வவுனியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து செல்வதையடுத்து, பல்வேறு பகுதிகளிலும் பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் கடந்த இருதினங்களிற்கு முன்பாக வவுனியா பழைய பேருந்து நிலையப்பகுதியில் அமைந்துள்ள வியாபார நிலையங்களில் பணிபுரிவோர் மற்றும் பல்வேறு தரப்பினரிடம் பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த பகுதியில் நின்றிருந்த பாலியல் தொழிலாளி ஒருவரிடமும் பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

அதன் முடிவுகள் கிடைக்கப்பெற்ற நிலையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

ஆயினும் குறித்த பெண் தலைமறைவாகியிருந்த நிலையில் பொலிசாரின் உதவியுடன் இன்று கண்டுபிடிக்கப்பட்டார்.

அவர் பம்பைமடு பகுதியில் அமைந்துள்ள கொரோனா தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.

Leave a Reply