‘கொத்தலாவ சட்டமூலத்தினை முறியடிக்க ஒன்றிணைவோம்’-வவுனியாவில் எதிர்ப்பு

கொத்தலாவலை இராணுவ பல்கலைகழக சட்டமூலத்திற்கு எதிராக வவுனியா பல்கலைகழக ஆசிரியர் சங்கத்தினரால் ஆர்பாட்டம் ஒன்று இன்று (28) முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா பல்கலைகழகம் அமைந்துள்ள பம்பைமடு பகுதியின் முன்பாக குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த அவர்கள்,

கன்னங்கராவால் முன்மொழியப்பட்ட இலவசக்கல்விக்கு குந்தகம் விளைவிக்கும் செயற்பாடுகளுக்கும், பல்கலைகழகங்களை தனியார் மயப்படுத்தி இராணுவ மயப்படுத்துவதையும் எதிர்த்து, நாம் இந்த போராட்டத்தினை முன்னெடுத்துள்ளோம்.

இந்த சட்டமூலத்திற்கு எதிரான செயற்பாடுகளுக்கு நாம் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்குவோம் என்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கொத்தலாவ சட்டமூலத்தினை முறியடிக்க ஒன்றிணைவோம், ஒழுக்கமென்பது கேள்வி கேட்காத கீழ்படிவல்ல, கொத்தலாவ இராணுவத்திற்கு?அரச பல்கலைகழக பொதுமக்கள் கல்விக்கு, இராணுவக்கல்வியும், பொதுமக்கள் கல்வியும் ஒன்றாக்கமுடியாது போன்ற வாசகங்கள் தாங்கிய பதாதைகளை ஏந்தியிருந்தன.

Leave a Reply