உயர் கல்வியின் நோக்கத்தினை சிதைக்காதீர் – வவுனியாவில் போராட்டம்

கொத்தலாவலை இராணுவ பல்கலைகழக சட்டமூலத்திற்கு எதிராக வவுனியாவிலும் இன்று (புதன்கிழமை) போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா பல்கலைகழகம் அமைந்துள்ள பம்பைமடுப் பகுதியில் வவுனியா பல்கலைகழக ஆசிரியர் சங்கத்தினரால் இந்த போராட்டம்  முன்னெடுக்கப்பட்டது.

பல்கலைகழகங்களை தனியார் மயப்படுத்தி இராணுவ மயப்படுத்துவதையும் எதிர்த்து இந்த போராட்டத்தினை முன்னெடுத்துள்ளதாக ஆசிரியர் சங்கத்தினர் தெரிவித்தனர்.

இந்த சட்டமூலத்திற்கு எதிரான செயற்பாடுகளுக்கு தாம் தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்குவோம் எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கொத்தலாவல சட்டமூலத்தினை முறியடிக்க ஒன்றிணைவோம், ஒழுக்கமென்பது கேள்விகேட்காத கீழ்படிவல்ல, கொத்தலாவல இராணுவத்திற்கு? அரச பல்கலைக்கழகம் பொதுமக்கள் கல்விக்கு, இராணுவக்கல்வியும் பொதுமக்கள் கல்வியும் ஒன்றாக்கமுடியாது போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை ஏந்தியிருந்தனர்.

Leave a Reply