63 இலட்சத்து 24 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சினோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸைப் பெற்றுள்ளனர்

நாட்டில் நேற்றைய தினம் 3 இலட்சத்து 80 ஆயிரத்து 463 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

அதன்படி, நேற்று மாத்திரம் 3 இலட்சத்து 38 ஆயிரத்து 914 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, நாட்டில் இதுவரை 63 இலட்சத்து 24 ஆயிரத்து 298 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இதேநேரம், 13 ஆயிரத்து 465 பேருக்கு மொடெர்னா தடுப்பூசியும் நேற்று செலுத்தப்பட்டது.

இதற்கமைய, இதுவரையில் 7 இலட்சத்து 9 ஆயிரத்து 468 பேருக்கு மொடர்னா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

அதேநேரம் நேற்றைய தினம் 30 பேருக்கு பைஸர் தடுப்பூசி செலுத்தப்பட்டதையடுத்த, அந்த தடுப்பூசியினை செலுத்திக்கொண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 114,105 ஆக அதிகரித்துள்ளது.

Leave a Reply