வடக்கில் தொடர் மழை!

வடக்கில் ஐந்து மாவட்டங்களிலும் நேற்று அதிகாலை தொடக்கம் மழை பெய்துவருகின்றது. அதனால் இயல்புநிலை முடங்கியுள்ளது. வவுனியாவிலேயே கடும் மழையும் பாதிப்பும் ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையின் தென்கிழக்கே வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் உருவாகியுள்ளது. இதனால் வடக்கு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்யும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

அதன்படி மழை தொடர்ச்சியாகவும் விட்டுவிட்டும் பெய்கின்றது. யாழ்ப்பாணத்தில் நேற்று கடும் மழை இல்லாவிட்டாலும், தொடர் மழையும் தூறலும் காணப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *