யாழ் பல்கலைக்கழக சைவசித்தாந்த துறையால் மெய்கண்டார் குருபூஜை தினம் முன்னெடுப்பு!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சைவ சித்தாந்ததுறை உயர்பட்டபடிப்புக்கள் பீடமும் சைவசித்தாந்த முதுமாணி கற்கை அணி மாணவர்களும் இணைந்து இன்று மாலை கைலாசபதி கலையரங்கில் மெய்கண்டார் குரு பூஜை தினத்தை முன்னெடுத்திருந்தனர்.

யாழ் பல்கலைக்கழகத்தின் சைவசித்தாந்த துறை தலைவர் பொன்னுத்துரை சந்திரசேகரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் ஆசியுரையை நல்லை ஆதின குரு முதல்வர் சிறில சிறி சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள்,முன்னாள் கலைப்பீடாதிபதியும் தகைசார் பேராசிரியருமான ப.கோபால கிருஷ்ண ஐயர், இலங்கை சர்வதேச இந்துகுருமார் ஒன்றிய தலைவரும் சைவ சித்தாந்த பண்டிதருமான ஜெகதீஸ்வரகுருக்கள் ஆகியோரால் ஆசியுரை இடம்பெற்றது.

தொடர்ச்சியாக பல்கலைக்கழக மாணவர்களால் மெய்கண்டாரின் வரலாற்றினை புலப்படுத்துமுகமான வில்லிசை,நாடகம் ,பட்டிமன்றம் ஆகிய கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன.

இதன் பொழுது நல்லை ஆதின குரு முதல்வர் ,முன்னாள் துணைவேந்தர் பாலசுந்தரம்பிள்ளை ,யாழ் பல்கலைக்கழக பதிவாளர்,யாழ் பல்கலைக்கழக இந்து நாகரீக பீடாதிபதி சுகந்தினி சிறிமுரளிதரன்,முன்னாள் கலைபீடாதிபதி கோபாலகிருஷ்ண ஐயர்,இலங்கை சர்வதேச இந்து குருமார் ஒன்றிய தலைவர் ஜெகதீஸ்வரகுருக்கள்,சைவ சித்தாந்ததுறை தலைவர் பொ.சந்திரசேகரம்,விரிவுரையாளர்கள்,மாணவர்கள்,என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *