<!–
சைவசமயத்தவர்கள் கடைப்பிடிக்கின்ற விரதங்களில் மிக முக்கியமான விரதமாக கந்தசஷ்டி விரதம் விளங்குகின்றது.
கந்தசஷ்டி விரதம் நேற்று(புதன்கிழமை) ஆரம்பமான நிலையில் யாழ்.மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தில் பெருமளவான பக்த அடியவர்கள் ஆலயத்திற்கு வருகை தந்திருந்தனை அவதானிக்க முடிகிறது.
மாவிட்டபுர கந்தசுவாமி பெருமானுக்கு அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை அரிச்சனை வாழ்த்து தோத்திரம் என ஆகம முறைப்படி வழிபாடுகள் நடாத்தப்பட்டிருந்ததுடன், காலை 10 மணியளவில் வசந்த மண்டப பூஜை இடம்பெற்று கந்தசுவாமி பெருமான் மயில் வாகனத்தில் உள்வீதியுலா வருகைதந்து பக்த அடியார்களுக்கு அளுள்பாலித்திருந்தார்.
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.