வன்முறையால் எம்மை தடுக்க முடியாது-நாமல் சூளுரை!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கிராமங்களுக்கு வந்து மக்களை சந்திப்பதை போராட்டங்கள் நடாத்தி தடுத்துவிடமுடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் புத்தளம் ஆராச்சிக்கட்டுவ தொகுதிக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சி வெற்றிநடைபோடும் எனவும், அதன் அரசியல் பயணத்தை வன்முறைமூலம் தடுக்க முடியாது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *