யாழ்ப்பாணத்தில் உள்ள ஊடக நிறுவன ஊழியர் ஒருவரிடம் பணப்பையை பறித்து 1500 ரூபாய் பணத்தை எடுத்துச் சென்ற சம்பவம் தொடர்பாக யாழ்.மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு முறைப்பாடு கிடைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பாதிக்கப்பட்ட நபர் கூறுகையில்,
தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தனது மோட்டார் சைக்கிளில் தன்னை வழிமறித்து நிறுத்தி நீ விபத்து ஏற்படுத்தும் முகமாக பயணிக்கிறாய் என கூறியதுடன், உனக்கு நீதிமன்றத்திற்கு வழக்கு எழுதப்போகின்றேன் எனக்கூறியும் எச்சரித்துள்ளார்.
அதுமட்டுமல்லாது ஊழியரின் பணப்பையினை பறித்து 1500 ரூபா பணத்தினை எடுத்துவிட்டு பணப்பையை திருப்பி கொடுத்துச் சென்றதாக கூறியுள்ளார்.
இந்நிலையில் சம்பவ தொடர்பில் யாழ்.மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரிடம் முறையிடப்பட்டுள்ளது.
பிற செய்திகள்