யாழ் ஊடகவியலாளர் நெடுந்தீவு லக்ஸ்மன் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் நெடுந்தீவை சேர்ந்த ஊடகவியலாளர் நாகேந்திரர் லட்சுமண ராஜா இன்றையதினம் வியாழக்கிழமை காலமானார். 

ஊடகவியலாளர், கவிஞர், எழுத்தாளரான  “நெடுந்தீவு லக்ஸ்மன்” என அழைக்கப்படும்  நாகேந்திரர் லட்சுமண ராஜா   நெடுந்தீவை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டவர். இவர் தொல்பொருள் திணைக்களத்தின் ஓய்வு நிலை உத்தியோகத்தரும் ஆவார். 

யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் பத்திரிகைகள்  மற்றும் தேசிய பத்திரிகைகள் என்பவற்றிலும் சுயாதீன ஊடகவியலாளராக  கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply