கொழும்பில் திடீரென குவிக்கப்பட்ட பொலிஸார் – அதிரடி சுற்றிவளைப்பில் சிக்கிய நபர்கள்

கொமும்பில் பல பொலிஸ் பிரிவுகளை உள்ளடக்கி விசேட பொலிஸ் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதன்படி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாளிகாவத்தை பொலிஸ் நிலையத்தினால் இரவு 8.00 மணி முதல் 10.00 மணி வரை குறித்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கமைய மருதானை, தெமட்டகொட மற்றும் கிராண்ட்பாஸ் ஆகிய பகுதிகளில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 10 பேர், 01 கிராம் மற்றும் 860 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த 08 சந்தேகநபர்கள் மற்றும் 155 மில்லிகிராம் ஹெரோயின் வைத்திருந்த இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், 04 கிராம் கஞ்சாவை வைத்திருந்த இரண்டு சந்தேகநபர்களும், கஞ்சாவுடன் கலக்கப்பட்ட 02 கிலோ 72 கிராம் மாவா வைத்திருந்த சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மாளிகாவத்தை, மருதானை மற்றும் மட்டக்குளிய பிரதேசங்களை வசிப்பிடமாகக் கொண்டவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில், சந்தேகநபர்களை இன்று மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *