மஹிந்த தலைமையில் விசேட கலந்துரையாடல்! SamugamMedia

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று (07) கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

கொழும்பில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

பொருளாதார நெருக்கடி, வரவிருக்கும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் போன்ற விடயங்களுக்கு பொதுஜன பெரமுன எவ்வாறு உதவ முடியும்  என்பது தொடர்பில் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை முன்னோக்கி கொண்டுசெல்லும் வழிகள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *