மட்டக்களப்பில் பாரம்பரிய உணவுகளின் கண்காட்சி! samugammedia

பாரம்பரிய உணவுகளின் கண்காட்சியும் செயன்முறையும் வாழைச்சேனை போதனாசிரியர் பிரிவின் கிண்ணையடியில் இடம்பெற்றது. 

குறித்த நிகழ்வானது மட்டக்களப்பு விவசாய திணைக்களத்தின் பண்ணை பெண்கள் விவசாய விரிவாக்கல் திட்டத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

விவசாய போதனாசிரியர் ச.ஸ்ரீகண்ணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் வி.பேரின்பராஜா,கோறளைப்பற்று பிரதேச செயலாக உதவித்திட்டப்பணிப்பாளர் கங்காதரன்,உதவி விவசாயப் பணிப்பாளர் க.அருந்தசாசன்,வேள்விஷன் உத்தியோகஸ்த்தர் யேசுதாசன்,ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது மக்களிடையே அருகி வரும் பாரம்பரிய உணவு பழக்கத்தினை செயல் முறைப்படுத்தும் விதமான விளக்க உரைகள்,உணவுகளை தயாரித்து காட்டல் மற்றும் பல்வேறு வகையான பாரம்பரிய உணவுகளை காட்சிப்படுத்தல் என்பன போன்ற விடயங்கள் முன்னெடுக்கப்பட்டன. 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *