தெங்கு உற்பத்தி ஏற்றுமதி அதிகரிப்பு…!

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் தெங்கு உற்பத்தி சார்ந்த பொருட்களின் ஏற்றுமதி வருமானம் 20% அதிகரித்துள்ளதாக தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர்  ரொஷான் பெரேரா தெரிவித்துள்ளார். 

தென்னையிலிருந்து பெறப்படும் பொருட்களிலிருந்து தேங்காய் எண்ணை உற்பத்தி, மற்றும் அழகுசாதன உற்பத்திகள் போன்றவற்றுக்கு சர்வதேச சந்தையில் அதிக  வரவேற்பு கிடைத்து வருகின்றது.

இதற்கமைய 330 மில்லியன் டொலர் வருமானம் கிடைத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply