
மீண்டும் நாட்டில் பயங்கரவாத அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள செய்திகள் மக்கள் மத்தியில் அச்சத்தையும் பரபரப்பையும் தோற்றுவித்துள்ளன. இலங்கையில் தங்கியிருக்கும் இஸ்ரேலியர்களை இலக்கு வைத்து தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்ற உளவுத்தகவல் கிடைத்தததைத் தொடர்ந்தே இந்த பதற்ற நிலை நேற்றைய தினம் தோற்றம் பெற்றது.