புதிய ஜனநாயக முண்ணனி 60க்கும் மேற்பட்ட ஆசனங்களை பெற்று ஆட்சி அமைக்கக்கூடிய சக்தியாக நாம் மாறுவோம்- அப்துல்லா மஹ்ரூப்!

இம் முறை நடைபெறவுள்ள விகிதாசார பொதுத் தேர்தலில் புதிய ஜனநாயக முண்ணனி 60க்கும் மேற்பட்ட ஆசனங்களை பெற்று ஆட்சியாளர்கள் அழைக்கக்கூடிய சக்தியாக நாம் மாறுவோம் என திருகோணமலை மாவட்ட புதிய ஜனநாயக முண்ணனியின் முதன்மை வேட்பாளரும் முன்னால் பிரதியமைச்சருமான அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்தார்.

கிண்ணியா_பெரியாற்று முனை பகுதியில் இன்று இடம் பெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில் புதிய ஜனநாயக முண்ணனி 22 மாவட்டங்களிலும் அனுபவமிக்க தலைவர்களை களமிறக்கியுள்ளது ரணில் விக்ரமசிங்களை அதிகமாக அரசியலுக்குள் மீண்டும் வர வேண்டும் என இளைஞர்கள் விரும்புகின்றனர் கடந்த இரு வருடங்களுக்குள் நாட்டை பொருளாதார ரீதியாக மீட்டெடுத்து எரிபொருள் பிரச்சினை அந்நியச் செலவாணியை அதிகரித்து காட்டியவர் இதனால் ரணிலை மீண்டும் எதிர்பார்க்கும் வண்ணமாக அதிக ஆசனங்களை பெறக் கூடிய நிலை மக்கள் மத்தியில் உருவாகியிருப்பதை அறிய முடிகிறது .

மூவின மக்களின் நம்பிக்கையை பெற்ற நான் திருமலை மண்ணில் சிலிண்டரில் போனஸ் ஆசனத்தை பெறக் கூடிய வாய்ப்பு உள்ளது பொதுஜன பெரமுன, தமிழ் தேசிய கூட்டமைப்பின் வாக்குகள் சிதரடிக்கப்பட்ட நிலையில் உள்ளது சிஸ்டம் சேன்ஜ் என்று கூறி அநுர குமார 41 வீத வாக்குகளை பெற்றாலும் மீண்டும் அதனை பெற முடியாத நிலை உள்ளாகும் என்பதை தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்கள் ஊடாக காண முடிகிறது எதிர்வரும் காலங்களில் தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படக்கூடிய  நேர்மையான தலைமைத்துவத்துடன் கூடிய ஆட்சி நடைபெறலாம் இதனால் மக்கள் மத்தியில் அதிக வாய்ப்புக்கள் இம் முறை காணப்படுகிறது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *