அகில இலங்கை ரீதியாக முதலாம் இடத்தினை பெற்ற மாணவர்களின் விபரம் வெளியாகியது.

இன்று வெளியாகிய கல்விப்பொதுத்தராதர உயர்தர பரீட்சை 2021 பெறுபேற்றின் அடிப்படையில் மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரி மாணவன் தமிழ்வாணன் துவாரகேஸ் உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தினைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

அத்துடன் பதுளை, கெங்கொல்ல மகா வித்தியாலய மாணவன் இசார லக்மால் ஹீன்கெந்த கலைப்பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தினைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

மேலும், நாரம்மல, மயுரபாத மத்திய கல்லூரி மாணவன் நெரந்த தில்ஹார குமாரசிங்க பொறியாளர் தொழில்நுட்ப பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தினைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply