சதாம் முஸ்லிம் வித்தியாலயத்தில் கல்வி அபிவிருந்தி திட்டம்!

முஸ்லிம் எயிட் நிறுவனம் முன்மாதிரி கிராம அபிவிருத்தி திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக திருகோணமலை கல்வி வலயத்துக்குட்பட்ட புல்மோட்டை 04 ம் வட்டார மாணவர்களின் கல்வி வளர்ச்சியினை அபிவிருத்தி செய்வதற்கான முதற்கட்ட வேலைத்திட்டமாக தரம் 03, 04 ,05 ஆகிய மாணவர்களுக்கு மேலதிக வகுப்புகளை உத்தியோகபுர்வமாக நடத்தும் நிகழ்வு (24) நடை பெற்றது.

இந் நிகழ்வில் முஸ்லிம் எயிட் நிறுவனத்தின் இலங்கைக்கான வதிவிட பணிப்பாளர் ஏ.சி. பைசர் கான் மற்றும் திட்ட முகாமையாளர் பஸ்லான் தாசீம் , திருகோணமலை மாவட்ட இணைப்பளர் சலீம் , திட்ட அதிகாரி முகம்மட் அஸ்வர் பாடசலை அதிபர் மற்றும் அசிரியர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர், கிராம உத்தியோகத்தர், பொற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

பிற செய்திகள்

Leave a Reply