மானிப்பாய் தேர்தல் தொகுதியின் முன்னாள் நாடளுமன்ற உறுப்பினர் அமரர் த.தர்மலிங்கத்தின் 37 ஆவது நினைவுதினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

தாவடி மானிப்பாய் பிரதான வீதியில் உள்ள அவரின் நினைவுத் தூபிக்கு முன்பாக மலர் தூவி.மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.நிகழ்வில் நாடளுமன்ற உறுப்பினர்கள்,சமூக ஆர்வலர்கள்,கட்சி உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.




